பதிவு செய்த நாள்
19 மார்2016
04:51
புதுடில்லி:மின் சாதனங்களில் பொருத்தப்படும், பேட்டரி தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த எவரெடி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், சமையலறை சாதனங்கள் விற்பனையில் களமிறங்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, எவரெடி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அம்ரிதன்ஷு கைதான் கூறியதாவது:இந்தியாவில், வீட்டு சாதனங்களின் சந்தை மதிப்பு, 15 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இது ஆண்டுதோறும், 10 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. தற்போது, 30 சதவீத வீட்டு சாதன பொருட்கள், இணையதளம் மூலம் விற்கப்படுகின்றன. இதை பின்பற்றி, எவரெடி நிறுவனம், குறைந்த விலையில், இணையதளம் மூலம் வீட்டு சாதன பொருட்களை விற்பனை செய்ய உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில், வீட்டு சாதன துறையில், எவரெடிநிறுவனத்தின் பங்கு, 5 சதவீதமக இருக்கும். வரும், செப்டம்பர் மாதத்திற்குள், 150 சேவை மையங்கள் துவங்கப்பட உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|