பதிவு செய்த நாள்
20 மார்2016
06:59
ரூர்கேலா : ஒடிசா மாநிலத்தில் உள்ள ரூர்கேலா ஸ்டீல் பிளான்ட், அதிக வலு கொண்ட உருக்கை தயாரிக்க முன்வந்துள்ளது. இதற்காக ரஷ்ய நாட்டின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்க உள்ளது.அண்மையில் ரூர்கேலா ஸ்டீல் பிளான்டில், இந்திய விஞ்ஞானிகளும் ரஷ்ய தொழில்நுட்ப வல்லுனர்களும் பங்கேற்று உருக்கு தயாரிப்பில் தேவைப்படும் தொழில்நுட்பங்கள் குறித்து கலந்துரையாடினர். இதன் தொடர்ச்சியாக ரூர்கேலா ஆலையில் ரஷ்ய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் எனும் அறிவிப்புவெளியானது. அடுத்தகட்டமாக ரஷ்ய தொழில்நுட்பம் இந்தியாவுக்கு வழங்கப்படும். ‘இத்தகைய வலுமிக்க ஸ்டீல் தயாரிப்பு மூன்று கட்டங்களாக நிறைவேற்றப்படும். முதற்கட்டமாக சோதனை ஓட்டங்கள். அடுத்து செம்மைப்படுத்தப்பட்ட உற்பத்தி, அடுத்து தரத்தை உறுதிசெய்து சான்று அளிப்பது என மூன்று கட்டங்களில் நடைபெறும்’ என ரூர்கேலா ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|