பதிவு செய்த நாள்
20 மார்2016
07:00
பெர்லின் : ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த, ‘மிட்டல்ஸ்டாண்ட்’ எனும் சிறிய, நடுத்தர தொழில்முனைவோர்கள் அமைப்பு, சுமார், 3,000 கோடி ரூபாய் அளவுக்கு, ‘மேக் இன் இந்தியா’வில் முதலீடு செய்ய முன்வந்திருக்கிறது. ஜெர்மனுக்கான இந்திய துாதர் குருஜித் சிங் இத்தகவலைத் தெரிவித்திருக்கிறார். இந்த, 3,000 கோடி ரூபாயைக் கொண்டு, 15 புதிய உற்பத்தி ஆலைகள், ஆறு விரிவாக்க திட்டங்கள், இரண்டு முன்னோடித் திட்டங்கள் ஆகியவற்றில், மஹாராஷ்டிரா, குஜராத், தமிழகம் ஆகிய மாநிலங்களில் ஆரம்பிக்க இருக்கின்றனர். பெர்லினில் உள்ள இந்திய துாதகரக அறிவிப்பில், இதுவரை, 29 நிறுவனங்கள், மேக் இன்இந்தியாவுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்திருக்கின்றன. வீட்டு சாதனப் பொருட்கள், காற்றாலை போன்ற தொழில்களில் அவர்கள் ஈடுபட இருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|