பதிவு செய்த நாள்
20 மார்2016
07:01
கொழும்பு : இலங்கையில் தொழில் துவங்க, இந்திய நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. கொழும்புவில் நடைபெற்ற இயந்திரங்கள், தொழில்நுட்பம், தொழிற்துறை பொருட்கள் ஆகியவற்றுக்கான மூன்று நாட்கள் கண்காட்சி, இந்திய முதலீட்டுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாக அமைந்தது. இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த, கொழும்புவில் நடைபெற்ற, ‘இண்டி – ஸ்ரீலங்கா 2016’ வர்த்தக கண்காட்சியில், சுமார், 86 நிறுவனங்கள் கலந்து கொண்டன. இக்கண்காட்சியில் பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள், ஆட்டோ சாதனங்கள், வீடு உபயோக சாதனங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியில், இலங்கை போக்குவரத்து மற்றும் விமானத் துறை அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா மற்றும் இந்திய துாதரக அதிகாரி ஒய்.கே.சின்ஹா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|