பதிவு செய்த நாள்
20 மார்2016
07:08
பானாஜி : டிஜிட்டல் ஹெல்த் கம்பெனியான, ‘ஓயிஹெல்ப்’ நிறுவனம், டாக்டர்கள், ‘கிளினிக்’குகள், மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கான ‘ஸ்மார்ட்போன் ஆப்’ ஒன்றைத் தயாரித்திருக்கிறது.
‘‘ஆண்ட்ராய்டு தளத்தில் இந்த ஆப் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதை பயன்படுத்தி, இரண்டே வாரத்தில் டாக்டர்கள், கிளினிக்குகள், மருத்துவமனைகள் தாராளமாக, ‘ஆன்லைன்’ கன்சல்ட்டிங் கிளினிக்குகளை ஆரம்பித்து விடலாம்,” என்கிறார், ஓயிஹெல்ப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான மீனா கபூர்.மேலும் இதுகுறித்து அவர் பேசும்போது, ‘‘ஆரம்ப வரவேற்பு உற்காசம் தருவதாக இருக்கிறது. இருப்பினும், சந்தை இதை எப்படி ஏற்றுக்கொள்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்,” என்றார்.ஓயிஹெல்ப் நிறுவனம், சுமார், 20 ஆண்டுகளாக புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளை, மருத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|