பதிவு செய்த நாள்
20 மார்2016
23:32
புதுடில்லி : தவறான விளம்பரங்கள் குறித்து கண்காணிக்க, மத்திய அரசு நியமித்து உள்ள அமைப்பிற்கு, 1,000க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. மக்களைக் கவரும் வகையில், பலவிதமான விளம்பரங்களை நிறுவனங்கள் வெளியிடுகின்றன. இவ்விளம்பரங்கள் மக்கள் மனதைப் பாதிக்கும் வகையில் இருந்துவிடக் கூடாது என்பதற்காக, மத்திய நுகர்வோர் விவகாரத் துறை, இவற்றைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க, இந்திய விளம்பர தர கவுன்சிலை அமைத்து உள்ளது.இந்த அமைப்பு, ‘காமா’ என்ற, ‘கிரீவன்ஸ் அகெய்ன்ஸ்ட் மிஸ்லீடிங் அட்வர்டைஸ்மென்ட்ஸ்’ என்ற இணையதளம் மூலம் தவறான விளம்பரம் குறித்த புகார்களை பெற்று வருகிறது. கடந்த, 2015, மார்ச் மாதம் துவங்கப்பட்ட, அந்த இணையதளத்தில் இதுவரை, 1,000க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டன. வங்கி, தொலைத் தொடர்பு, நுகர்வோர் சாதன விளம்பரம் குறித்தே அதிக புகார்கள் வந்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|