பதிவு செய்த நாள்
20 மார்2016
23:42
புதுடில்லி : நவீன் ஜிண்டாலின், 1,000 மெகாவாட் திறன் உடைய மின் நிலையத்தை, அவரது சகோதரர் சஜ்ஜன் ஜிண்டால் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சத்தீஸ்கர் மாநிலம், ராய்கரில், நவீன் ஜிண்டாலின், ஜே.எஸ்.பி.எல்., நிறுவனத்திற்கு சொந்தமாக, 1,000 மெகாவாட் மற்றும், 2,400 மெகாவாட் திறன் உடைய அனல் மின் நிலையங்கள் உள்ளன. இந்நிறுவனத்தின் நிகர கடன், கடந்த, 2014 – 15ம் நிதி ஆண்டில், 35 ஆயிரத்து, 419 கோடி ரூபாயில் இருந்து, 42 ஆயிரத்து, 929 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதையடுத்து, நவீனின், 1,000 மெகாவாட் திறன் உடைய மின் நிலையத்தை, அவரது சகோதரர் சஜ்ஜன் ஜிண்டாலின் ஜே.எஸ்.டபிள்யூ., நிறுவனம், கையகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் விலை, 5,500 – 5,800 கோடி ரூபாய் என்றளவில் இருக்கலாம் என தெரிகிறது. இதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இந்த வாரத்தில் வரலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|