பதிவு செய்த நாள்
20 மார்2016
23:48
புதுடில்லி : சீனாவில், வலைதளம் வாயிலாக பொருட்களை விற்பதில் முதலிடத்தில் உள்ளது அலிபாபா நிறுவனம். இந்நிறுவனம், இந்திய, ‘இ – காமர்ஸ்’ சந்தையில் இந்தாண்டு நேரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, அலிபாபா நிறுவனர், ஜேக் மா, ஏற்கனவே, மூன்று முறை இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடியை ஒருமுறை சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில், அண்மையில் அலிபாபா குழுமத்தினர் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்துப் பேசினார். அப்போது, ‘இந்தியா வரும் அலிபாபாவுக்கு, முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்’ என, அமைச்சர் உறுதி அளித்தார். அலிபாபா, ஏற்கனவே இந்தியாவில், ‘பேடிஎம், ஸ்நாப்டீல்’ உள்ளிட்ட, ‘இ – காமர்ஸ்’ நிறுவனங்களில் முதலீடுகளை செய்துள்ளது. இத்துடன், இந்திய வர்த்தகர்கள் மூலமாகவும் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது, நேரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|