பதிவு செய்த நாள்
21 மார்2016
03:06
புதுடில்லி : ஆசிய நாடுகளில், பணியாற்றுவதற்கு பலவகையிலும் உகந்த சூழல் உள்ள அலுவலகங்களின் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த, 10 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த, ‘கிரேட் பிளேஸ் டு ஒர்க் இன்ஸ்டிடியூட்’ என்ற அமைப்பு, ஆசியாவைச் சேர்ந்த ஒன்பது நாடுகளில், 900 நிறுவனங்களில் பணியாற்றும், 2 லட்சத்திற்கும் அதிகமானோரிடம், ஆய்வு நடத்தி, இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவைச் சேர்ந்த, கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ், லுாபின், மகிந்திரா அண்டு மகிந்திரா ஆட்டோமோட்டிவ் அண்டு பார்ம் எக்யூப்மென்ட், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட, 10 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
நிறுவன தலைமையிடம் நம்பிக்கை, பதவியில் பெருமை, சக ஊழியர்களுடன் நல்லுறவு, பதவி பாகுபாடின்றி அனைவரையும் சமமாக மதிக்கும் பண்பு, நியாயமான பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில், இத்தேர்வு நடைபெற்றது. இத்தகைய சிறப்பான சூழல் நிலவும் அலுவலகங்களில், ஊழியர்கள் சுயவிருப்பத்துடன் கூடுதலாக உழைத்து, பணியை முடித்து தருகின்றனர்; அலுவலகச் சூழலால் கவரப்பட்ட பலர், அங்கேயே தங்கி பணியாற்றவும் தயாராக உள்ளனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த பட்டியலில், பன்னாட்டு நிறுவனங்கள் பிரிவில், டி.எச்.எல்., முதலிடத்தை பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து, ஆம்னிகாம், கூகுள், இ.எம்.சி., உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன.
எவை எவை?* கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ்* லுாபின்* மகிந்திரா அண்டு மகிந்திரா ஆட்டோமோட்டிவ் அண்டு பார்ம் எக்யூப்மென்ட்* பஜாஜ் பைனான்ஸ் * உஜ்ஜிவன் பைனான்சியல் சர்வீசஸ்* ஆர்.எம்.எஸ்.ஐ., * லைப்ஸ்டைல் இன்டர்நேஷனல்* சில்வர் ஸ்பார்க் அப்பரல்* இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் * இன்ட்யூட் இந்தியா டெவலப்மென்ட் சென்டர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|