பதிவு செய்த நாள்
23 மார்2016
07:05
புதுடில்லி : ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த விஷயங்களில் தொடர்ந்து புதுமைகளை புகுத்தி வரும் டெட்டால், ‘அமேசான் இந்தியா’ நிறுவனத்துடன் சேர்ந்து, காற்று மாசிலிருந்து பாதுகாக்க உதவும் முகமூடிகளை, அதாவது, ‘மாஸ்க்’குகளை அறிமுகப்படுத்தி உள்ளது.இந்தியாவின் பல நகரங்களில் காற்று மிகவும் மாசடைந்து வரும் நிலையில், டெட்டாலின் இந்த தயாரிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது குறித்து டெட்டால் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் டைரக்டர் அர்ஜுன் புர்காயஸ்தா கூறியதாவது: காற்று மாசடைந்து வருவதால், நுரையீரல், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களும் அதிகரித்து வருகின்றன. இதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இந்த முகமூடியை தயாரித்துள்ளோம். இது பயன்படுத்துவதற்கு மிக எளிதானது. அமேசான் மூலமாக ஆன்லைனில் இதை வாங்கிக் கொள்ளலாம். இன்னும் சிறிது நாட்களில் பிற, ‘இ – காமர்ஸ்’ தளங்களிலும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|