பதிவு செய்த நாள்
23 மார்2016
07:06
புதுடில்லி : வருமானவரித் துறை, போலி, ‘பான் கார்டுகளை’ கண்டறிய, தனி மென்பொருளை உருவாக்கி உள்ளது. பான் கார்டிற்கு பொதுமக்கள் விண்ணப்பிக்கும் போது, ஊழியர்கள், ஆவணங்கள் மூலம் அதற்கான பணிகளை மேற்கொள்கின்றனர். இதனால், சில நேரங்களில், ஒரே எண், இருவருக்கு வழங்கப்பட்டு விடுகிறது. இதையடுத்து, பல குழப்பங்கள் ஏற்பட்டு விடுகின்றன. இதை தவிர்க்க, ஐ.டி.பி.ஏ.பி.ஏ.என்., எனப்படும், ‘இன்கம் டேக்ஸ் பிசினஸ் அப்ளிகேஷன் பெர்மனன்ட் அக்கவுன்ட் நம்பர்’ என்ற, தனி மென்பொருளை, வருமானவரித் துறை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், ஒரே எண் இருவருக்கு வழங்கப்படுவது தடுக்கப்படும். முற்றிலும், கம்ப்யூட்டர் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், முறைகேடு தடுக்கப்படும். இந்தியாவில், தற்போது, 24.37 கோடி பேர், பான் கார்டு வைத்து உள்ளனர். இதில், எத்தனை பேர், ஒரே எண்ணை வைத்துள்ளனர் என்ற விவரம் முழுமையாக தெரியவில்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|