பதிவு செய்த நாள்
23 மார்2016
07:10
புதுடில்லி : புதிய கம்பெனிகள் சட்ட திருத்த மசோதாவில்,நிறுவனங்கள் மேற்கொள்ளும் முதலீட்டிற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. கடந்த, 2013ம் ஆண்டு, கம்பெனிகள் சட்டத்தின்படி, ஒரு நிறுவனத்திற்கு பல துணை நிறுவனங்கள் இருந்தாலும், இரு நிறுவனங்கள் மூலமாக மட்டுமே முதலீடு செய்யலாம். நிறுவனங்களின் வர்த்தக ஒருங்கிணைப்பை பாதிக்கும் இந்த சட்டப் பிரிவை, மத்திய அரசு தற்போது நீக்கியுள்ளது. அதுபோல, சில வகை நிறுவனங்கள், குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல், துணை நிறுவனங்களை அமைக்க கட்டுப்பாடு விதிக்கும் பிரிவும் நீக்கப்பட்டுள்ளது. இவற்றுடன், கம்பெனிகள் சட்ட குழு அளித்த, நுாற்றுக்கும் அதிகமான பரிந்துரைகளை, மத்திய அரசு, 2016ம் ஆண்டின் புதிய கம்பெனிகள் சட்ட திருத்த மசோதாவில் சேர்த்துள்ளது. இதை, தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|