பதிவு செய்த நாள்
23 மார்2016
07:12
புதுடில்லி : இந்தியாவில் வலைதளம் வாயிலான மின்னணு வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு, 6 – 8 சதவீதம் வரி விதிக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு வல்லுனர் குழு பரிந்துரைத்துஉள்ளது.
மத்திய அரசு, ‘டிஜிட்டல்’ தொழில்நுட்பம் வாயிலான வர்த்தகத்தில், வரி, லாப பகிர்வு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆராய, வல்லுனர் குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழு, அதன் பரிந்துரையை நிதி அமைச்சகத்திடம் வழங்கியுள்ளது.
அதன் விவரம்: இந்தியாவில் வசிக்கும் ஒரு நபர் அல்லது நிறுவனம், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து, குறிப்பிட்ட டிஜிட்டல் சேவைகளை பெறும்பட்சத்தில், அச்சேவைக்கு, 6 – 8 சதவீதம் சமச்சீர் வரி விதிக்கலாம். இதன்படி, ‘ஆன்லைன்’ மார்க்கெட்டிங், விளம்பரம், வலைதள வடிவமைப்பு, செயலாக்கம் மற்றும் பராமரிப்பு, வலைதளம் வாயிலான பொருட்கள் விற்பனை, ‘சாப்ட்வேர்’ மற்றும் ‘ஆப்’ பதிவிறக்கம் உள்ளிட்ட சேவைகளுக்கு, சமச்சீர் வரி விதிப்பது குறித்து, முடிவு செய்யலாம். இந்த வரியை, வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து, சேவையை பெறுவோர் வசூலிக்கலாம்; இத்தொகைக்கு, லாப அடிப்படையிலான வரி விதிப்பின் கீழ், வரி விலக்கு அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
இத்திட்டம் அமலுக்கு வந்தால், ‘கூகுள், பேஸ்புக், டுவிட்டர்’ உள்ளிட்ட சமூக வலைதளங்கள், சமச்சீர் வரி செலுத்த நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|