பதிவு செய்த நாள்
23 மார்2016
07:13
புதுடில்லி : மத்திய அரசு, பி.பி.எப்., உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்கள் மற்றும் மூத்த குடிமக்களின் டிபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்திருப்பது, முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அதேசமயம், ‘மத்திய அரசின் நடவடிக்கை, நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரியும். ஏனெனில், டிபாசிட்டிற்கான வட்டி குறைந்தால், கடனுக்கான வட்டியும் குறையும். அதனால், தொழில் உள்ளிட்ட முக்கிய துறைகள் வளர்ச்சி பெற்று, நாடு முன்னேறும்’ என, பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வங்கிகள் சொல்வது...ரிசர்வ் வங்கி, கடந்த ஓராண்டில், வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை, 1.25 சதவீதம் வரை குறைத்தது.ஆனால், வங்கிகளோ, அந்த ஆதாயத்தை அப்படியே கடனாளிகளுக்கு வழங்காமல், 0.60 – 0.70 சதவீதம் வரை மட்டுமே, வட்டியை குறைத்தன. அதற்கு, ‘டிபாசிட்டிற்கான வட்டியை குறைத்தால்தான், கடனுக்கான வட்டியை மேலும் குறைக்க முடியும். அப்படி குறைக்க முடியாதபடி, அரசின் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்வாக உள்ளது’ என, வங்கிகள் கூறி வந்தன.அதையொட்டிதான், தற்போது சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை, மத்திய அரசு குறைத்துள்ளது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி, வரும் ஏப்., 5ல், நிதிக் கொள்கையை அறிவிக்க உள்ளது. அப்போது, வங்கிகளுக்கான வட்டி குறைக்கப்படும் பட்சத்தில், வங்கிகள், கடன் மற்றும் டிபாசிட்டிற்கான வட்டியை குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பணம் மிச்சமாகும்‘இதன்மூலம் வங்கிகள், அவற்றின் கடன் – டிபாசிட் செலவின விகிதத்தை சீரமைத்துக் கொள்ளும்’ என, நிதி வல்லுனர்கள் கூறுகின்றனர். மத்திய அரசு, ஆண்டுதோறும், 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்குகிறது. சிறுசேமிப்புக்கு வட்டி குறைக்கப்பட்டு உள்ள தால், மத்திய அரசுக்கு, குறிப்பிடத்தக்க பணம் மிச்சமாகும். அது, சமூக முன்னேற்ற திட்டங்களுக்கும், அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கும் செலவிடப்படும்.
ஏப்ரலில் அமல்மத்திய அரசு, பி.பி.எப்., கிசான் விகாஸ், தேசிய சேமிப்பு பத்திரம், அஞ்சலக சேமிப்பு திட்டங்கள், மூத்த குடிமக்கள் மற்றும், பெண்குழந்தைகளின் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை, 0.40 – 1 சதவீதம் வரை குறைத்துள்ளது. வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரை, புதிய வட்டி விகிதம் அமலில் இருக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|