வலை­தள பரி­வர்த்­த­னைக்கு 8 சத­வீத வரிவலை­தள பரி­வர்த்­த­னைக்கு 8 சத­வீத வரி ... ரூபாயின் மதிப்பு தொடர் சரிவு - ரூ.66.79 ரூபாயின் மதிப்பு தொடர் சரிவு - ரூ.66.79 ...
சிறு­சே­மிப்பு வட்டி குறைப்பு; மத்­திய அரசு, வங்­கி­க­ளுக்கு லாபம் முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2016
07:13

புது­டில்லி : மத்­திய அரசு, பி.பி.எப்., உள்­ளிட்ட சிறு­சே­மிப்பு திட்­டங்கள் மற்றும் மூத்த குடி­மக்­களின் டிபா­சிட்­டு­க­ளுக்­கான வட்டி விகி­தத்தை குறைத்­தி­ருப்­பது, முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு ஏமாற்­றத்தை அளித்­துள்­ளது.
அதே­ச­மயம், ‘மத்­திய அரசின் நட­வ­டிக்கை, நாட்டின் நீண்­ட­கால பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு துணை­பு­ரியும். ஏனெனில், டிபா­சிட்­டிற்­கான வட்டி குறைந்தால், கட­னுக்­கான வட்­டியும் குறையும். அதனால், தொழில் உள்­ளிட்ட முக்­கிய துறைகள் வளர்ச்சி பெற்று, நாடு முன்­னேறும்’ என, பொரு­ளா­தார ஆய்­வா­ளர்கள் தெரிவிக்­கின்­றனர்.
வங்கிகள் சொல்வது...ரிசர்வ் வங்கி, கடந்த ஓராண்டில், வங்­கி­க­ளுக்கு வழங்கும் கட­னுக்­கான வட்­டியை, 1.25 சத­வீதம் வரை குறைத்­தது.ஆனால், வங்­கி­களோ, அந்த ஆதா­யத்தை அப்­ப­டியே கட­னா­ளி­க­ளுக்கு வழங்­காமல், 0.60 – 0.70 சத­வீதம் வரை மட்­டுமே, வட்டியை குறைத்­தன. அதற்கு, ‘டிபா­சிட்­டிற்­கான வட்டியை குறைத்­தால்தான், கட­னுக்­கான வட்­டியை மேலும் குறைக்க முடியும். அப்­படி குறைக்க முடி­யா­த­படி, அரசின் சிறு­சே­மிப்பு திட்­டங்­க­ளுக்­கான வட்டி உயர்­வாக உள்­ளது’ என, வங்­கிகள் கூறி வந்­தன.அதை­யொட்­டிதான், தற்­போது சிறு­சே­மிப்பு திட்டங்­க­ளுக்­கான வட்­டியை, மத்­திய அரசு குறைத்­துள்­ளது. இந்­நி­லையில், ரிசர்வ் வங்கி, வரும் ஏப்., 5ல், நிதிக் கொள்­கையை அறி­விக்க உள்­ளது. அப்­போது, வங்­கி­க­ளுக்­கான வட்டி குறைக்கப்படும் ­பட்­சத்தில், வங்­கிகள், கடன் மற்றும் டிபா­சிட்­டிற்­கான வட்­டியை குறைக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
பணம் மிச்சமாகும்‘இதன்­மூலம் வங்­கிகள், அவற்றின் கடன் – டிபாசிட் செலவின விகி­தத்தை சீரமைத்துக் கொள்ளும்’ என, நிதி வல்லுனர்கள் கூறு­கின்­றனர். மத்­திய அரசு, ஆண்­டு­தோறும், 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்­கு­கி­றது. சிறு­சே­மிப்­புக்கு வட்டி குறைக்­கப்­பட்டு உள்­ள தால், மத்­திய அர­சுக்கு, குறிப்­பி­டத்­தக்க பணம் மிச்­ச­மாகும். அது, சமூக முன்­னேற்ற திட்டங்­க­ளுக்கும், அடிப்­படை கட்­ட­மைப்பு பணி­க­ளுக்கும் செல­விடப்­படும்.
ஏப்­ரலில் அமல்மத்­திய அரசு, பி.பி.எப்., கிசான் விகாஸ், தேசிய சேமிப்பு பத்­திரம், அஞ்­ச­லக சேமிப்பு திட்­டங்கள், மூத்த குடி­மக்கள் மற்றும், பெண்குழந்­தை­களின் சேமிப்பு திட்­டங்­க­ளுக்­கான வட்­டியை, 0.40 – 1 சதவீதம் வரை குறைத்­துள்­ளது. வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரை, புதிய வட்டி விகிதம் அமலில் இருக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)