பதிவு செய்த நாள்
24 மார்2016
00:40
கொச்சி : கேரள மாநில உணவு பாதுகாப்பு அமைப்பு, கலப்பட தேங்காய் எண்ணெய் தயாரிப்பை தடுக்கும் விதமாக, தயாரிப்பாளர்கள் தங்கள், ‘பிராண்ட்’ பெயரை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.‘‘தேங்காய் எண்ணெய் தயாரிப்பில் ஈடுபடுவோர், தங்களது பிராண்டை பதிவு செய்துகொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில், அந்த எண்ணெய்யை தயாரிப்பது, கொள்முதல் செய்வது, விற்பது அனைத்தும் தண்டனைக்கு உரிய குற்றமாகக் கருதப்படும். அவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என, உணவு பாதுகாப்பு கண்காணிப்பாளர் அனுபமா தெரிவித்துள்ளார். சமீப காலமாக, மாநிலத்தில் விற்கப்படும் தேங்காய் எண்ணெய்யில் கலப்படம் அதிகம் இருப்பதாக சோதனையில் தெரியவந்தது. அந்த எண்ணெய்களை கைப்பற்றி, அதற்கு தடை விதித்தாலும், வேறு பெயர்களில் சந்தைக்கு வந்துவிடுகிறது. இதையடுத்தே இந்த முடிவுக்கு அதிகாரிகள் வந்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|