பதிவு செய்த நாள்
25 மார்2016
07:49
சென்னை : திரைப்படங்களுக்கு செல்பவர்களின் வசதிகளை அதிகரிக்கும் விதமாகவும், படம் பார்க்கும் அனுபவத்துக்கான பயணத்தை எளிதாக்கும் வகையிலும், புக்மைஷோ நிறுவனம், ஊபர் நிறுவனத்துடன் இணைந்து, புதிய பயண வசதியை அறிமுகம் செய்துள்ளது.இனி, புக்மைஷோ மூலமாக, திரைப்படங்களுக்கு டிக்கெட்டை புக் செய்யும்போதே, ஊபர் காரையும் சேர்த்தே புக் செய்து கொள்ளலாம். இதுகுறித்து, புக்மைஷோ நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துணைத் தலைவர் மார்ஸ்டி கார்லியன்வாலா கூறுகையில், ‘‘வாடிக்கையாளர்கள், எங்கள் மூலமாக டிக்கெட்டுகளை புக் செய்யும்போது, அவர்களது திருப்தியை நாங்கள் உறுதி செய்கிறோம். அத்துடன் நின்றுவிடாமல், அவர்களுக்கு மேலும் மதிப்புக்கூட்டும் வகையிலான வசதிகளை செய்து கொடுப்பதிலும் கவனம் செலுத்துகிறோம். அந்த வகையில்தான், இப்போது நாங்கள் ஊபருடன் இணைந்து இந்த சேவையை வழங்குகிறோம்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|