பதிவு செய்த நாள்
25 மார்2016
07:52
மும்பை : அனில் அம்பானியின், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளது. இது தொடர்பான அனைத்து பூர்வாங்க பணிகளையும், கடந்த, 21ம் தேதியுடன் முடிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஒரு சில அம்சங்களில் முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்ட தால், கால அவகாசம், மே, 22 வரைநீட்டிக்கப்பட்டுள்ளதாக, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம், ஏற்கனவே, சிஸ்டெமா ஷியாம் டெலிசர்வீசஸ் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கான பணிகளை முடித்து விட்டது. இதையடுத்து, ஏர்செல் நிறுவனத்தையும் கையகப்படுத்தும்பட்சத்தில், இந்தியாவில் தொலைதொடர்பு சேவையில், அதிக வாடிக்கையாளர்களுடன், மூன்றாவது நிறுவனமாக, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உருவெடுக்கும். முதலிடத்தில் பார்தி ஏர்டெல், அடுத்து வோடபோன் ஆகியவை உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|