வேலை தேடு­வதில் மாறு­பட்ட மனோ­பாவம்வேலை தேடு­வதில் மாறு­பட்ட மனோ­பாவம் ... 'ஸ்மார்ட் போன்' விற்பனை:இந்தியாவில் 'தெறி'க்கும் 'ஸ்மார்ட் போன்' விற்பனை:இந்தியாவில் 'தெறி'க்கும் ...
தடை கொடுத்த கொடை; ஆயுர்­வேத மருந்து நிறு­வ­னங்­க­ளுக்கு பொழியும் பண மழை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2016
07:56

புது­டில்லி : பக்­க­வி­ளை­வு­களை உண்டாக்கும், ஆங்­கில மருந்­து­க­ளுக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளதால், மூலிகை பொருட்­களால் தயா­ரிக்­கப்­படும் ஆயுர்­வேத மருந்­துகள் விற்­பனை அதி­க­ரிக்கத் துவங்­கி­யுள்­ளது.
மத்­திய அரசு, ‘பிக்சட் – டோஸ்’ எனப்­படும், 344 கலப்பு மருந்­துகள் விற்­ப­னைக்கு, கடந்த வாரம் தடை விதித்­தது. இதன்­படி, ஜல­தோஷம், இருமல் போன்­ற­வற்­றுக்கு நிவா­ரணம் அளிக்கக் கூடிய, ‘விக்ஸ் ஆக் ஷன் – 500 எக்ஸ்ட்ரா, கோரக்ஸ்’ போன்ற மருந்­துகள் தடை செய்­யப்­பட்­டு உள்ளன. இதனால், பக்­க­வி­ளை­வுகள் இல்­லாத, அதே சமயம் ஆங்­கில மருந்­து­க­ளுக்கு ஈடான ஆயுர்­வேத மருந்­து­களை, நோயா­ளிகள் நாடத் துவங்­கி­யுள்­ளனர். இந்த அரு­மை­யான வாய்ப்பை பயன்­ப­டுத்தி, ‘டாபர் இந்­தியா, சரக் பார்மா’ உள்­ளிட்ட ஆயுர்­வேத மருந்து நிறு­வ­னங்கள், வர்த்­த­கத்தை அதி­க­ரிக்கும் முயற்­சியில் இறங்­கி உள்­ளன.
விளம்பர முயற்சிடாபர் இந்­தியா, அதன், ‘டாபர் ஹோனிடஸ்’ என்ற ஆயுர்­வேத இருமல் மருந்தின் மகத்­துவம் குறித்து, ஊட­கங்­களில் அதி­ரடி விளம்­ப­ரங்­களை வெளி­யிடத் துவங்­கி­யுள்­ளது. அவற்றில், தடை செய்­யப்­பட்ட பல இருமல் மருந்­து­ க­ளுக்கு, சரி­யான தீர்வு, ‘டாபா ஹோனிடஸ்’ என்ற வாச­கங்கள் பளிச்­சிடு­கின்­றன. சரக், ஹிமா­லயா டிரக் உள்ளிட்ட பல ஆயுர்­வேத மருந்து நிறு­வ­னங்­களும், அவற்றின் விற்பனையை முடுக்கி விட்­டு உள்­ளன. அது­போல, அமைப்பு சாரா மருந்து நிறு­வ­னங்­களும், சந்தை யில் தற்­கா­லி­க­மாக ஏற்­பட்­டுள்ள வெற்­றி­டத்தை நிரப்­பு­வ­தற்­கான முயற்­சியை துவக்­கி­யுள்­ளன.
புத்துணர்ச்சிஎனினும், 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்­புள்ள, இந்­திய ஆயுர்­வேத மருந்து சந்­தையில், டாபர் இந்­தியா, சரக், ஹிமா­லயா டிரக் போன்ற முன்­னணி நிறு­வ­னங்­களின் பங்­க­ளிப்பு, 1 – 2 சத­வீ­தத்­திற்கும் குறை­வா­கவே உள்­ளது. அவற்றின், விற்­று­முதல் கூட, 300 – 500 கோடி ரூபாய் என்ற அள­விற்கு, மிகக் குறை­வா­கவே உள்ளது. அதே சமயம், ஆங்­கில மருந்து நிறு­வ­னங்­களோ, இதை விட பல மடங்கு விற்­று­மு­தலைக் கண்டு வரு­கின்­றன. இருந்­த­போ­திலும், கலப்பு மருந்­து­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டுள்ள தடை, ஆயுர்­வேத மருந்து துறைக்கு புத்­து­ணர்ச்­சியை அளித்து, இத்­துறை நிறு­வ­னங்­களின் எழுச்­சிக்கு வித்­திட்­டுள்­ளது என்றால், அது மிகை­யா­காது.
நிவா­ரணம்கலப்பு மருந்­துகள் விற்பனைக்கு விதிக்­கப்­பட்ட தடைக்கு எதி­ராக, மருந்து நிறுவனங்கள், சுப்ரீம் கோர்ட்டில் முறை­யிட்டு, இடைக்­கால நிவா­ரணம் பெற்­று உள்­ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)