பதிவு செய்த நாள்
26 மார்2016
05:30
மும்பை: சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த, ‘விக்டோரிநாக்ஸ்’ நிறுவனம், கத்தி, கை கடிகாரம், சுற்றுலா பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறது.இந்நிறுவனம், இந்தியாவில், வரும், 2018ம் ஆண்டிற்குள், 80 கோடி ரூபாய் முதலீட்டில், 35 கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து, விக்டோரிநாக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான கலேனல் சந்தோகி கூறியதாவது:இந்தாண்டு, சென்னை, டில்லி, மும்பை, பெங்களூரு ஆகிய இடங்களில், 20 கடைகள் திறக்கப்படும். அடுத்த ஆண்டு, 10 கடைகளும், 2018ல், 5 கடைகளும் திறக்கப்படும்.இவை, ‘கான்செப்ட் ஸ்டோர்’ என, அழைக்கப்படும். இங்கு, ‘குட் ரீஸ்’ என்ற பிராண்டு பெயரில், கத்தி மற்றும் சுற்றுலா பொருட்கள் விற்பனை செய்யப்படும். இத்துடன், இதர சர்வதேச பிராண்டுகளும் விற்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|