பதிவு செய்த நாள்
26 மார்2016
05:33
மும்பை: கடந்த காலாண்டில், தனியார் பெரு நிறுவன வணிகத் துறையின் நிகர லாபம், அதற்கு முந்தைய காலாண்டை விட அதிகரித்திருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, இது தெரிய வந்திருக்கிறது.இந்திய ரிசர்வ் வங்கி, 2,736 அரசு அல்லாத, நிதி சாராத நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கை குறித்த விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த புள்ளி விவரங்களை தொகுத்து வழங்கி உள்ளது.இதை வைத்து பார்க்கும் போது, கடந்த காலாண்டில், இந்நிறுவனங்கள் சார்ந்த துறையின் நிகர லாபம், 15.9 சதவீதமாகும். இதுவே, அதற்கு முந்தைய காலாண்டில், 9.9 சதவீதமாக இருந்தது. குறிப்பாக, உற்பத்தி துறையின் நிகர லாபம் நன்றாக அதிகரித்து காணப்படுகிறது. அதே போல், தொழில்நுட்பத் துறை சாராத சேவை நிறுவனங்களின் நிகர லாபமும் அதிகரித்திருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|