தனியார் பெரு நிறு­வ­னங்கள் நிகர லாபம் அதி­க­ரிப்புதனியார் பெரு நிறு­வ­னங்கள் நிகர லாபம் அதி­க­ரிப்பு ... ஓபராய் ஓட்டல் உறுதி 2 ஆண்­டு­க­ளுக்கு மூடல் ஓபராய் ஓட்டல் உறுதி 2 ஆண்­டு­க­ளுக்கு மூடல் ...
வலை­தள வணிகம் திரும்பி வரும் பொருட்­களால் இழப்பு:விற்­ப­னை­யா­ளர்கள் புலம்பல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2016
05:34

புது­டில்லி: வலை­தளம் மூலம் பொருட்­களை விற்­பனை செய்யும் ‘அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல்’ போன்ற நிறுவனங்கள், வாடிக்­கை­யாளர்­களை கவர, பல்­வேறுசலு­கை­களை வழங்­கு­கின்­றன.அவற்றுள், ‘விற்­பனை செய்­யப்­படும் பொருளில் திருப்தி இல்­லை­யெனில், அதை திருப்பி அனுப்பி, பணம் பெற்றுக் கொள்­ளலாம்; அல்­லது வேறு பொருள் வாங்கிக் கொள்­ளலாம்’ என்ற சலுகையும் அடங்கும். இதை பயன்­ப­டுத்தி, பொருட்­களை திருப்பி அனுப்பி பணம் பெறு­வது அதி­க­ரித்து வரு­வதால், பெரும் இழப்­பிற்கு ஆளா­கி­யுள்­ள­தாக, ‘அமேசான்’ போன்ற வலை­தள நிறு­வ­னங்கள் மூலம் பொருட்­களை விற்­பனை செய்வோர் புலம்­பு­கின்­றனர்.
சந்தை போட்டி கார­ண­மாக, ஏரா­ள­மான வலை­தள நிறு­வ­னங்கள், ‘டிவி, பிரிட்ஜ் போன்ற சாத­னங்­க­ளுக்கு, மூன்று நாட்­களும், ‘ஸ்மார்ட்போன், கம்ப்­யூட்டர்’ ஆகி­ய­வற்­றுக்கு, அதி­க­பட்­ச­மாக, 45 நாட்­களும், சலுகை காலம் வழங்­கு­கின்­றன.
இந்த காலத்­திற்குள், பொருட்­களின் செயல்­பா­டு­களில் திருப்தி இல்­லை­யெனில், அவற்றை, திருப்பி அனுப்பி, பணமோ அல்­லது வேறு பொருளோ பெற்றுக் கொள்­ளலாம். இந்த சலு­கையை, பெரும்­பாலும், கல்­லுாரி மாண­வர்­கள்தான், அதிக அளவில் தவ­றாக பயன்­ப­டுத்­து­வ­தாக கூறப்­ப­டு­கி­றது. அவர்கள், ‘ஸ்மார்ட்­போன்’­களை ஒரு மாதம் பயன்­ப­டுத்தி, அதன் பிறகு, ஏதா­வது காரணம் கூறி, திருப்பி அனுப்பு­கின்­றனர். செலுத்­திய பணத்­தையும் வாங்கி விடு­கின்றனர்.
இது குறித்து, ஒரு விற்­ப­னை­யாளர் கூறி­ய­தா­வது:சமீப கால­மாக, வலை­தள நிறு­வ­னங்கள் மூலம் விற்­கப்­படும், ஸ்மார்ட்­போன்­களில், சரி­பாதி, திரும்ப வந்து விடு­கி­றது. என் கடையில் அவற்றை விற்­பனை செய்­தி­ருந்தால், ஒரு நாள் கழித்து வந்­தாலும் அவற்றை ஏற்­றுக்­கொள்ள மாட்டேன். வலை­தள நிறு­வ­னங்­களின் விதி­மு­றையால், புதிய பொருள், பழைய பொரு­ளாக மாறி, என் கைக்கு வரு­கி­றது. அது­மட்டு­மின்றி, சரக்கு போக்­கு­வ­ரத்து செலவும் என் தலையில் விழு­கி­றது.இவ்­வாறு அவர் கூறினார்.
ஆனால், இந்த வாதத்தை வலை­தள நிறு­வ­னங்கள், ஏற்க மறுக்­கின்­றன. ‘‘ஒருவர் ஒரு நாளில் தன் கடை மூலம் விற்­பனை செய்­வதை விட பல மடங்கு, வலை­தள நிறு­வ­னங்கள் மூலம் விற்­பனை செய்­கிறார். அதில், திருப்பி அனுப்­பப்­படும் பொருட்கள் 4 சத­வீத அள­விற்கே இருக்கும் என்­பதால் அதை லாபத்தில் ஏற்­படும் இழப்­பா­கத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்,’’ என, ஷாப்­குளுஸ் டாட் காம் நிறு­வனர் சந்தீப் அகர்வால் தெரி­வித்­துள்ளார். இத­னி­டையே, வலை­தள நிறு­வ­ன­மான, பே.டி.எம்., பொருட்­களை வாங்கி பயன்­ப­டுத்­திய பிறகு, திருப்பி அனுப்­பு­வ­தையே வழக்­க­மாக கொண்டோர் விவ­ரங்­களைச் சேக­ரித்து, அவர்கள் மீண்டும் பொருட்கள் வாங்க முடி­யா­த­வாறு, கறுப்பு பட்­டி­யலில் சேர்த்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)