பதிவு செய்த நாள்
27 மார்2016
05:51
புதுடில்லி : டில்லியின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும், பிரபல ஓபராய் ஓட்டல், இரு ஆண்டுகளுக்கு மூடப்படுகிறது.அரை நுாற்றாண்டுக்கும் மேலாக, டில்லியில் இயங்கிவரும் ஓபராய் ஓட்டல், மறுசீரமைப்புக்காக, இரு ஆண்டுகள் மூடப்படுகிறது. 325 கோடி ரூபாயில், இந்த மறுசீரமைப்பு நடைபெற உள்ளது.டில்லியில் மூடப்பட்டாலும், இதே ஆண்டில் ஐக்கிய அரபு நாடு, மொரோகோ ஆகிய இடங்களில், புதிய ஓட்டல்களை துவக்க உள்ளது. டில்லி ஓட்டல் மூடப்படுவதை அடுத்து, அதன் ஊழியர்கள் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்படுகின்றனர். மாறுதலை விரும்பாதவர்கள், வேலையைராஜினாமா செய்கின்றனர்.‘இரு ஆண்டுகள் என்பது, மிகப்பெரிய காலமாகும். அதனால் வாடிக்கையாளர்கள் வேறு இடங்களோடு ஐக்கியமாகி விடுவர். அவர்களை மீட்டெடுப்பது சிரமமானது’ என, பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வந்த போதும், தன் முடிவில் உறுதியாக இருந்துவிட்டது, ஓட்டல் நிர்வாகம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|