பதிவு செய்த நாள்
27 மார்2016
05:52
புதுடில்லி : நடப்பு, 2015 – 16ம் நிதியாண்டில், ஏப்., – பிப்., வரையிலான, 10 மாதங்களில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், பல்வேறு நிறுவன பங்குகளில், 75 ஆயிரத்து 394 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. இது, 2014 – 15ம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட, 68 ஆயிரத்து 121 கோடி ரூபாயை விட, அதிகம்.சிறிய நகரங்களில் உள்ள சில்லரை முதலீட்டாளர்கள், அதிக அளவில் மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். மதிப்பீட்டு காலத்தில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் பங்கு சார்ந்த முதலீட்டு திட்டங்களில், சிறிய நகரங்களில் உள்ளோரின் பங்களிப்பு, 40 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதற்கு, சிறிய நகரங்களில் முதலீடுகளை ஊக்குவிக்க, ‘செபி’ எடுத்து வரும் நடவடிக்கைகள் துணை புரிந்துள்ளன.மியூச்சுவல் பண்டு திட்டங்களில் திரட்டப்படும் நிதி, பங்குகள், கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|