பதிவு செய்த நாள்
27 மார்2016
05:58
மும்பை : இந்திய நிறுவனங்கள், பங்குகளாக மாற்ற இயலாத கடன் பத்திரங்களை வெளியிட்டு, நடப்பு நிதியாண்டில் மட்டும், 58 ஆயிரத்து 533 கோடி ரூபாயை திரட்டியுள்ளன. அண்மைக் காலமாக, பங்குச்சந்தை சூழல் சிறப்பானதாக இல்லாத காரணத்தால், இந்திய நிறுவனங்கள், பங்குகளாக மாற்ற இயலாத கடன் பத்திரங்களை (என்.சி.டி.,) வெளியிட்டு, நிதி திரட்டியுள்ளதாக, பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான, ‘செபி’ தெரிவித்துள்ளது. இந்திய நிறுவனங்கள் தங்களுடைய விரிவாக்கத் திட்டம், இதர பொதுச் செலவுகள் போன்றவற்றுக்காக, இத்தகைய கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டியுள்ளன.மொத்தம், 20 கடன் பத்திர வெளியீடுகள் மூலம், இந்த தொகை திரட்டப்பட்டு உள்ளது. கடந்த நிதியாண்டில் இந்த எண்ணிக்கை, 25ஆக இருந்தது. கடந்த நிதியாண்டில் திரட்டப்பட்ட தொகையைக் காட்டிலும், தற்போது நிறுவனங்கள், 9,713 கோடி ரூபாயை, அதிகமாக நிறுவனங்கள் நிதி திரட்டியுள்ளன. செபி இந்த தகவல்களை தெரிவித்திருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|