பதிவு செய்த நாள்
27 மார்2016
05:59
புதுடில்லி : கிறிஸ்தவர்களின் புனித வெள்ளியை, தங்களது வியாபார வளர்ச்சிக்கு பயன்படுத்தும் எண்ணத்தில் நடந்து கொண்ட, ‘ஸ்நாப்டீல்’ நிறுவனம், மன்னிப்பு கோரியுள்ளது.கடந்த, 25ம் தேதி வெள்ளிக்கிழமையை உலகெங்கி லும் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியாகக் கருதி, பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை, புனித வெள்ளி யாகக் கருதி, பிரார்த்தனைகளில் ஈடுபடுவது கிறிஸ்தவர்கள் வழக்கம். அந்த வகையில் மார்ச், 25ம் தேதியை புனித வெள்ளியாகக் கடைபிடித்தனர். இந்த புனித வெள்ளியின் காரணத்தை சரியாகப் புரிந்துகொள்ளாத காரணத்தாலோ, என்னவோ, அதை ஒரு கொண்டாட்டமாகக் கருதி, சிறப்பு சலுகைகளை அறிவித்தது ஸ்நாப்டீல். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதும், ‘இது எங்கள் தரப்பு தவறுதான். வருத்தம் தெரிவிக்கிறோம்; மனதை புண்படுத்தியதற்காக மன்னிப்பும் கோருகிறோம்’ என, மன்னிப்பை கோரியுள்ளது ஸ்நாப்டீல் நிறுவனம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|