பதிவு செய்த நாள்
27 மார்2016
06:00
வாஷிங்டன் : அமெரிக்க முதலீட்டாளர்கள், சீனாவை விட, இந்திய நிறுவனங்களில் அதிகளவில் பங்கு முதலீடு செய்துள்ளதாக, அமெரிக்க கருவூல துறை அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.அதன் விவரம்:கடந்த 2015, டிசம்பர் நிலவரப்படி, அமெரிக்க முதலீட்டாளர்கள், இந்தியாவில் செய்த நேரடி பங்கு முதலீடு, 1.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, சீனாவில், 1.6 சதவீதம் என்ற அளவிற்கே உள்ளது. அமெரிக்க முதலீட்டாளர்கள், 2013 செப்டம்பர் நிலவரப்படி, இந்திய நிறுவனங்களில், 700 கோடி டாலர் பங்கு முதலீடு செய்திருந்தனர். இது, 2015 டிசம்பரில், 1,200 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், அமெரிக்க முதலீட்டாளர்கள், சீனாவில் மேற்கொண்ட பங்கு முதலீடு, 1,280 கோடி டாலரில் இருந்து, 1,110 கோடி டாலராக சரிவடைந்து உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|