பதிவு செய்த நாள்
27 மார்2016
06:01
புதுடில்லி : பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்திய அரசின் தங்க நாணயங்களை விற்பனை செய்ய துவங்கி உள்ளது.5, 10, 20 கிராம் என, எடை கொண்ட இந்த நாணயங்களை, குறிப்பிட்ட சில கிளைகள் மூலமாக விற்பனை செய்கிறது, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. இந்த நாணயங்கள், இந்திய அரசால் முதன்முதலாக வெளியிடப்படும் நாணயங்கள் ஆகும்.இந்த இந்திய தங்க நாணயங்கள், சுத்தமான, 24 கேரட்டில் செய்யப்பட்ட நாணயங்கள் ஆகும். இவற்றின் ஒருபுறம் அசோக சக்கரமும், மறுபுறம், மகாத்மா காந்தியிம் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கும். ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் அடிப்படையில், இந்த நாணயங்கள் அரசால் தயாரிக்கப்படுகின்றன. இந்திய கனிமங்கள் மற்றும் உலோகங்கள் வர்த்தக கழகத்துடன், தங்க நாணயங்களை விற்பதற்கான ஒப்பந்தத்தில், முதன்முதலாக கையெழுத்திட்டுள்ள வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியாகும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|