பதிவு செய்த நாள்
27 மார்2016
06:02
சென்னை : சென்னையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள, நோக்கியா தொழிற்சாலையை வாங்க யாரும் முன்வராததால், அது மீண்டும் திறக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம், கடந்த, 2014 ஏப்ரலில், நோக்கியா நிறுவனத்தை, 740 கோடி டாலருக்கு கையகப்படுத்தியது; விற்பனை வரி பிரச்னையில் சிக்கிய, சென்னை நோக்கியா தொழில் பிரிவை மட்டும் விட்டுவிட்டது. இதையடுத்து, 2014 நவ., 1ம் தேதி, நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டது; 6,600க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இதையடுத்து, தமிழக அரசு, மீண்டும் நோக்கியா தொழிற்சாலையை திறக்க, முயற்சி மேற்கொண்டது. இதற்காக, தகவல் தொழில்நுட்ப செயலர் டி.கே.ராமசந்திரன் தலைமையில், தனி குழு அமைக்கப்பட்டது. இதனிடையே, மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்ப துறையும், தனி குழுவை நியமித்து, நோக்கியா தொழிற்சாலைக்கு முதலீட்டாளர்களை தேடி வந்தது. அதனால், நோக்கியா தொழிற்சாலை மீண்டும் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொழிற்சாலையை வாங்க வந்த ஒருசிலரும், தற்போது பின்வாங்கி விட்டதால், அதன் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
இதுகுறித்து, நோக்கியா நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: நோக்கியா தொழிற்சாலை சொத்துகளை விற்க, வணிகவரித் துறை தடை விதித்துள்ளது. அதை நீக்கினால், நிலைமை சரியாகி விடும். ‘சாப்ட்வேர்’ விற்பனைக்கு, பின்லாந்தில் வரி செலுத்தப்பட்டு உள்ளது. இங்கும் வரி செலுத்தக் கோருவது, இந்தியா – பின்லாந்து இடையிலான, இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தை மீறுவதாகும். இது தொடர்பாக, இரு நாடுகளிடையே உடன்பாடு ஏற்பட்டால், தொழிற்சாலைக்கு விடிவு பிறக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|