பதிவு செய்த நாள்
28 மார்2016
07:14
தனிநபர் நிதி விவாதங்களில் பணம், முதலீடு, வருவாய் பற்றி எல்லாம் பேசப்படும் அளவுக்கு மகிழ்ச்சி பற்றி பேசப்படுவதில்லை. ஆனால், உங்களை மகிழ வைப்பது எவை என்பது முக்கியமான கேள்வியாகும். இதற்கான பதிலை தேடும் போது எண்களையும், கணக்குகளையும் விட்டு விலகி, வாழ்க்கையின் தருணங்களை அனுபவிப்பதில் தவறில்லை என நினைக்க வைக்கிறது. இந்த கேள்விக்கான பதில் தெரிந்தால், அதன் அடிப்படையில் உங்கள் செலவு, பழக்கங்களை தீர்மானித்துக் கொள்ளலாம். பணம் சேர்ப்பதை விட மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழிகளை நோக்கி முன்னேறலாம். மகிழ்ச்சி என்பது நிதி திட்டமிடலின் நோக்கமாகி, அதன் அடிப்படையாகவும் மாறிவிடுகிறது. அதற்காக, இஷ்டம் போல செலவிட வேண்டும் என்றில்லை; மகிழ்ச்சியையும், நீண்டகால பாதுகாப்பையும் முக்கியமாக கருத வேண்டும்.
நிதி ஆவணங்கள் பாதுகாப்பு
சேமிப்பது, முதலீடு செய்வது போலவே நிதி ஆவணங்களை உரிய முறையில் பாதுகாப்பது அவசியம். நிதி ஆவணங்கள் எனும் போது காப்பீடு சான்றிதழ் முதல் வைப்பு நிதி, பங்கு பத்திரங்கள், பரஸ்பர நிதிகள், சொத்து பத்திரம் என எல்லாம் அடங்கும். பாஸ்போர்ட், பான் கார்டு போன்றவற்றையும் கவனமாக பாதுகாக்க வேண்டும். இவை தவிர வங்கி கணக்கு அறிக்கைகள், கிரெடிட் கார்டு அறிக்கைகள், பில்கள், ரசீதுகள் ஆகியவற்றையும் கவனமாக பராமரிக்க வேண்டும். இந்த ஆவணங்களை கவனமாக பாதுகாப்பது ஒரு சிக்கல் என்றால், இவற்றில் எந்த ஆவணங்களை எல்லாம் நிரந்தரமாக பாதுகாக்க வேண்டும்; எவற்றை எல்லாம் தேவை முடிந்தவுடன் அப்புறப்படுத்தலாம் எனும் கேள்வியும் சிக்கலை ஏற்படுத்தலாம்.
இதற்கான வழிகாட்டி இதோ:
வகைப்படுத்தல்நிதி ஆவணங்கள் பாதுகாப்பில் முதலில் செய்ய வேண்டியது, அவற்றை வகைப்படுத்துவது தான். ஒரு சில ஆவணங்களை நிரந்தரமாக பாதுகாக்க வேண்டும்; சிலவற்றை குறிப்பிட்ட காலம் வரை பராமரிக்க வேண்டும். சில ஆவணங்களை அவற்றின் சமீபத்திய நகலை மட்டும் வைத்திருந்தால் போதுமானது. இந்த அடிப்படையில் நிரந்தர பாதுகாப்பிற்கானவை; குறிப்பிட்ட காலத்திற்கானவை மற்றும் சமீபத்திய நகல் தேவைப்படுபவை என, மூன்று வகையாக பிரித்துக் கொண்டால் அவற்றை பாதுகாப்பதில் உரிய கவனம் செலுத்தலாம்.
ஒரு சில ஆவணங்களை, அவை செல்லுபடியாகும் காலம் வரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். காப்பீடு, வைப்பு நிதி சான்றிதழ்கள் போன்றவை இதில் அடங்கும்.உதாரணம்: வருமான வரி தாக்கல் விவரங்கள் (ஏழு ஆண்டுகள்), வாரன்டி சான்றிதழ்கள் (வாரன்டி காலம் வரை), காப்பீடு சான்றிதழ்கள் (காப்பீடு காலம் வரை), வைப்பு நிதி மற்றும் தொடர் வைப்பு நிதி சான்றிதழ்கள் (முதிர்வு காலம் வரை), பண டிபாசிட் சான்றிதழ்கள் (அவற்றுக்குறிய காலம்).
சமீபத்திய நகல்கள்கிரெடிட் கார்டு அறிக்கை மற்றும் பில் ரசீதுகளின் சமீபத்திய வடிவத்தை மட்டும் வைத்திருந்தால் கூட போதுமானது.உதாரணம்: பில்கள், ரசீதுகள், வருமான வரி விலக்கு சலுகை சான்றிதழ்கள், வீட்டுக்கடன் வட்டி விகித ரசீது, தற்காலிக ரசீதுகள்.
நிரந்தர ஆவணங்கள்முக்கியமான சான்றிதழ்கள், சொத்து பத்திரம் போன்றவற்றை வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்; இவற்றில் சிலவற்றை வாரிசுகளும் பாதுகாக்க வேண்டும்.உதாரணம்:பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட், திருமண சான்றிதழ், சொத்து பத்திரங்கள், ஜாதி சான்றிதழ், உயில்கள், பத்திரங்கள் மற்றும் பங்கு பத்திரங்கள், ஒய்வு கால திட்ட பத்திரங்கள்
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|