பதிவு செய்த நாள்
28 மார்2016
07:16
இந்திய பெண்கள் மத்தியில், மருத்துவ காப்பீடு பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. பெண்கள், தங்கள் குடும்பத்தின் பாதுகாப்பை முதன்மையாக கருதுவதும் தெரிய வந்துள்ளது. மருத்துவம், பயணம், வீட்டுக்கடன் போன்ற பிரிவுகளில் பெண்கள், ரிஸ்க் தன்மையை எப்படி அணுகுகின்றனர் என்பதை அறிந்து கொள்வதற்காக, ஐ.சி.ஐ.சி.ஐ., லாம்பார்டு பொது காப்பீடு நிறுவனம், இணையம் மூலம் பெண்கள் மத்தியில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இ – மெயில், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் மூலம், 22 முதல், 55 வயது வரையிலான பெண்கள் மத்தியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களில் பெரும்பாலானோர், மருத்துவ காப்பீடு, பயண காப்பீடு போன்றவற்றை அறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், மருத்துவ காப்பீடு பெற்றிருப்பதாகவும் கூறியுள்ளனர். பலர், வீட்டு பாதுகாப்பு காப்பீடும் பெற்றுள்ளனர். புயல், மழை போன்ற ஆபத்துகள் பற்றி அறிந்திருப்பதாகவும், குடும்ப பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை முக்கியமாக கருதுவதாகவும் பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|