இருசக்­கர வாகன டயர்; ‘கலக்க’ வரும் சர்­வ­தேச நாடுகள்; கலக்­கத்தில் இந்­திய நிறு­வ­னங்கள்இருசக்­கர வாகன டயர்; ‘கலக்க’ வரும் சர்­வ­தேச நாடுகள்; கலக்­கத்தில் இந்­திய ... ... 10,000 வணி­கர்­க­ளுக்கு கடன் ‘ஆஸ்க்மி’ குழுமம் முடிவு 10,000 வணி­கர்­க­ளுக்கு கடன் ‘ஆஸ்க்மி’ குழுமம் முடிவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பி.பி.எப்., முத­லீட்டில் மாற்றம் தேவையா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2016
07:18

சிறு­சே­மிப்பு திட்­டங்­க­ளுக்­கான வட்டி குறைப்பை அடுத்து, பி.பி.எப்., திட்­டத்­திற்­கான வட்­டியும் குறைந்­துள்ள நிலையில், முத­லீட்­டா­ளர்­களின் அணு­கு­முறை எப்­படி இருக்க வேண்டும்?
வருங்­கால வைப்பு நிதி திட்­ட­மான பி.எப்., திட்­டத்தின் மீதான வரி விதிப்பு சர்ச்சை அடங்­கு­வ­தற்குள், பொது வருங்­கால வைப்பு நிதி­யான பி.பி.எப்., திட்­டத்­திற்­கான வட்டி குறைப்பு, பல்­வேறு தரப்­பினர் மத்­தி­யிலும் கடும் எதிர்ப்­புக்­கு­உள்ளாகி இருக்­கி­றது. பி.பி.எப்., எதிர்­கால வாழ்க்­கைக்­கான, நீண்­ட­கால முத­லீ­டாக கரு­தப்­ப­டு­வதால் இதன் மீதான வட்டி குறைப்பு அறி­விப்பு பர­வ­லான எதிர்ப்­புக்கும், கண்­ட­னத்­திற்கும் உள்­ளா­கி­யுள்­ளது. கடந்த மார்ச், 18ம் தேதி, சிறு­சே­மிப்பு திட்­டங்­க­ளுக்­கான வட்டி விகிதம், நிதி அமைச்­ச­கத்தால் குறைக்­கப்­பட்­டது. இதன் படி, பி.பி.எப்., திட்­டத்­திற்­கான வட்டி விகி­தமும், 8.7 சத­வீ­தத்­தி­லி­ருந்து, 8.1 சத­வீ­த­மாக குறைக்­கப்­பட்­டது.
வட்டி குறைப்புஏப்ரல் மாதம் முதல், சிறுசேமிப்பு திட்­டங்­க­ளுக்­கான வட்டி விகிதம், சந்தை நிலைக்­கேற்ப ஒவ்­வொரு காலாண்டும் மாற்­றி­ய­மைக்­கப்­படும் என, கடந்த பிப்­ர­வரி மாதம் அறி­விக்­கப்­பட்­டதை தொடர்ந்து இந்த முடிவு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.இதற்கு முன், சிறுசேமிப்பு திட்­டங்­களுக்­கான வட்டி விகிதம், அரசு பத்­தி­ரங்­க­ளுக்கு நிக­ராக அமைந்­தி­ருந்­தன. இவை, ஆண்­டுக்கு ஒரு­முறை மாற்­றி­ய­மைக்­கப்­பட்டு வந்­தன.மேலும், 0.25 சத­வீத கூடுதல் பலனும் அளிக்­கப்­பட்டு வந்­தது. ஆனால், தற்­போது காலாண்­டுக்கு ஒரு­முறை பரி­சீ­லிக்­கப்­படும் முறை நடை­மு­றைக்கு வந்­துள்­ளது. இத­ன­டிப்­ப­டையில், பி.பி.எப்., வட்டி குறைக்­கப்­பட்டு உள்­ளது. செல்­வ­மகள் சேமிப்பு திட்டம் மற்றும் கிசான் விகாஸ் பத்­தி­ரங்­க­ளுக்­கான வட்டி விகி­தமும் குறைக்­கப்­பட்­டுள்­ளன.
பாதிப்பு இருக்குமா?இந்த வட்டி குறைப்பு, சிறு­சே­மிப்பு திட்­டங்கள் மீதான பலனை குறைக்கும் என்று அஞ்­சப்­ப­டு­கி­றது. ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும் போது, வங்­கிகள் உட­ன­டி­யாக அதன் பலனை வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அளிப்­ப­தில்லை என, ஒரு குற்­றச்­சாட்டு இருக்­கி­றது. ஆனால் வங்­கிகள், டிபாசிட் மீதான வட்டி விகி­தத்தை உட­ன­டி­யாக குறைக்கும் சூழல் இல்­லா­ததால், வட்டி விகி­தத்தை உட­ன­டி­யாக குறைக்க முடி­ய­வில்லை என கூறி வந்­தன. சிறு சேமிப்பு திட்­டங்­களின் வட்டி, வங்கி டிபா­சிட்கள் தரும் பலனை விட அதி­க­மாக இருக்கும் என்­பதால், வங்­கிகள் இதில் தயக்கம் காட்­டின. இந்த நிலையை சீராக்கும் வகையில் சிறு­சே­மிப்பு வட்டி விகிதம், சந்தை நிலைக்­கேற்ப கொண்டு வரப்­பட்­டுள்­ளது. இதன் கார­ண­மாக இனி, வங்­கிகள் வழங்கும் கட­னுக்­கான வட்டி விகிதம் குறை­வ­தற்­கான வாய்ப்­பி­ருப்­ப­தாக கரு­தப்­ப­டு­கி­றது.இவை, பி.பி.எப்., முத­லீட்டின் பலன் மீதான பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பி­உள்ளன. வட்டி விகிதம் குறைந்­தி­ருப்­ப­துடன் வரும் காலாண்­டு­களில் மேலும் குறைக்­கப்­படும் வாய்ப்பு உண்­டா­குமா எனும் சந்­தே­கமும் எழுந்­துள்­ளது.
என்ன செய்ய வேண்டும்சிறு முத­லீட்­டா­ளர்கள், அதிக பலன் தரக்­கூ­டிய முத­லீட்டு சாத­னங்­களை இனி நாட வேண்­டிய சூழலை இது ஏற்­ப­டுத்­தலாம் என்றும் ஒரு கருத்து நில­வு­கி­றது. இதன் கார­ண­மாக, பி.பி.எப்., முத­லீட்டை இனி எப்­படி அணுக வேண்டும் எனும் கேள்­வியும் எழுந்­துள்­ளது.ஆனால், வட்டி குறைப்பை மட்­டுமே வைத்துக் கொண்டு, பி.பி.எப்., திட்­டத்தின் பலனை அள­விடக் கூடாது என, நிதி வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர். பி.பி.எப்., நீண்­ட­கால சேமிப்பு திட்டம் என்­ப­தோடு, அது முத­லீடு மற்றும் திரும்பப் பெறும் நிலையில் வரிச்­ச­லுகை அளிக்கக் கூடி­ய­தாக இருக்­கி­றது. அதோடு, திட்­டத்­திற்­கான வட்டி விகிதம் காலாண்டு அடிப்­ப­டையில் அமைந்­தாலும், மாதாந்­திர அடிப்­ப­டையில் வட்டி கணக்­கி­டப்­பட்டு, ஆண்டு இறு­தியில் வரவு வைக்­கப்­படும். எனவே, இது கூட்டு வட்டி முறையில் வரு­டாந்­திர அடிப்­ப­டையில் தான் அமை­யுமே தவிர, காலாண்டு அடிப்­ப­டை­யி­லல்ல என்­பதும் கவ­னிக்க வேண்­டிய விஷயம்.
மேலும் வட்டி குறைப்பை தனியே பார்க்­காமல், மொத்­த­மாக சந்­தையில் ஏற்­பட்­டுள்ள குறைந்த வட்டி சூழலில் வைத்து பார்க்க வேண்டும் என்றும் கூறு­கின்­றனர். தற்­போது ஓர­ளவு பண­வீக்க விகிதம் மற்றும் வட்டி விகிதம் இரண்­டுமே இறங்கு முகத்தில் உள்­ளன. எனினும் வட்டி விகி­தத்தை மட்­டுமே கருத்தில் கொண்டு, ஒருவர் தன் முத­லீட்டு உத்­தியை மாற்­று­வது சரி­யாக இருக்­காது என, நிதி வல்­லு­னர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)