பதிவு செய்த நாள்
28 மார்2016
07:21
புதுடில்லி : ‘ஆஸ்க்மி’ குழுமம், அதன் ஆஸ்க்மி பைனான்ஸ் நிறுவனம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் ஈடுபட்டுள்ள, 10 ஆயிரம் வணிகர்களுக்கு, 1,000 கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிட்டுள்ளது. ஆஸ்க்மி குழுமத்தின் கீழ், ஆஸ்க்மி பஜார், ஆஸ்க்மி கிராசரி என பல நிறுவனங்கள் இயங்குகின்றன.இவற்றிலும், குழுமத்தின் வலைதளம் சாரா வணிகத்திலும் குறு, சிறு தொழில்களில் ஈடுபட்டு உள்ள, 1.50 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். அவற்றில், வரும், 2016 – 17ம் நிதியாண்டுக்குள், 10 ஆயிரம் பேருக்கு கடன் வழங்க, ஆஸ்க்மி பைனான்ஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக, மகிந்திரா பைனான்ஸ், பஜாஜ் பைனான்ஸ், ரெலிகேர் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றுடன் ஆஸ்க்மி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த கடன் உதவி மூலம் பரஸ்பர வணிகம் அதிகரிக்கும் என, ஆஸ்க்மி குழுமம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|