பதிவு செய்த நாள்
28 மார்2016
07:24
புதுடில்லி : ஜி.எம்.ஆர்., நிறுவனம், கடன் சுமையைக் குறைக்க, தன் சாலை திட்டங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. ஜி.எம்.ஆர்., இன்ப்ராஸ்டிரக்சர் நிறுவனம், சாலை அமைத்தல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், தற்போது, 730 கி.மீ., நீளம் உடைய சாலைகள் அமைப்பதற்கான ஆர்டர்களை பெற்றுள்ளது. இதன் மதிப்பு, 6,000 கோடி ரூபாய். கடந்த, 2015 செப்., நிலவரப்படி, இந்நிறுவனத்தின் கடன் அளவு, 43,440 கோடி ரூபாயாக உள்ளது. இதையடுத்து, கடன் பிரச்னையை சமாளிக்க ஜி.எம்.ஆர்., நிறுவனம், தான் மேற்கொண்டு வரும் சாலை திட்டங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக, கட்டுமான நிறுவனங்கள், வங்கிகளுடன் ஆலோசனையை துவக்கி உள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே, ஜட்சேர்லா விரைவு சாலை, உளுந்துார்பேட்டை விரைவு சாலை திட்டங்களில் தலா, 74 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|