பதிவு செய்த நாள்
28 மார்2016
07:28
புதுடில்லி : ‘‘இந்தியாவின் அலுமினியம் பயன்பாடு, இரண்டு கோடி டன்னாக உயரும்,’’ என, வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.டில்லியில், இந்திய தொழிலக கூட்டமைப்பில் அவர் பேசியதாவது:இந்தியா தற்போது, 15 லட்சம் டன் அலுமினியம் தான் உற்பத்தி செய்கிறது. ஆனால், அலுமினிய பயன்பாடு, 20 லட்சம் டன்னாக உள்ளது. இது, வரும் ஆண்டுகளில், இரண்டு கோடி டன்னாக உயரும்.ஏனெனில், தற்போது அனைத்து துறைகளிலும் அலுமினியம் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ரயில்வே, கட்டுமானம், விமானம், வாகனம் என, பல்வேறு துறைகளிலும், தாமிரத்திற்கு மாற்றாக அலுமினியம் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அதனால், அலுமினியம் தான் எதிர்கால தொழில் துறையில் ஆட்சி செலுத்தும். எனினும், இத்துறையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களை துவக்க, 25 – 500 கோடி ரூபாய் வரை முதலீடு தேவைப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|