பதிவு செய்த நாள்
28 மார்2016
07:30
புதுடில்லி : ‘இந்தியாவில் உள்ள, ‘எம்.எஸ்.எம்.இ.,’ எனப்படும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பணியாளர்களின் திறனை மேம்படுத்த தீவிரமாக முயற்சிக்க வேண்டும்’ என, பி.எச்.டி., வர்த்தக சபை மற்றும் ஏவியன் மீடியா நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விவரம்:மத்திய அரசின், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்திற்கு, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். ஆனால், இந்நிறுவனங்களில் திறமையான பணியாளர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளும் போதுமானதாக இல்லை. குறிப்பாக, தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் பணியாளர்கள் பின்தங்கி உள்ளனர். வடக்குபிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 42சதவீத நிறுவனங்கள் மட்டுமே பணியாளர்களின் திறனை மேம்படுத்த பயிற்சி வழங்குவதாக தெரிவித்துள்ளன.
ஆய்வில் பங்கேற்ற பணியாளர்களில், 20 சதவீதம் பேர், திறன் அற்றவர்களாகவும்; 21 சதவீதத்தினர், வேலையில் சேர்ந்த பின், திறனை வளர்த்துக் கொண்டவர்களாகவும் உள்ளனர். ‘நேர்த்தியான, திறன் வளர்ப்பு பயிற்சி திட்டம் அவசியம் என்ற போதிலும், அதற்கான வசதிகளும், பணியாளர்களின் ஒத்துழைப்பும் இல்லை’ என, 61 சதவீத நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த ஆய்வில், நிதி துறையில், 41 சதவீதம்; விற்பனை துறையில், 39 சதவீத நிறுவனங்கள் மட்டுமே தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. இவற்றை பயன்படுத்துவதால், வர்த்த நடைமுறை செலவு குறைந்துள்ளதாக, 85 சதவீதமும், நேரம் மிச்ச மாவதாக, 80 சதவீத நிறுவனங்களும் தெரிவித்து உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|