பதிவு செய்த நாள்
29 மார்2016
07:03
புதுடில்லி : ‘பேடிஎம்’ நிறுவனம், அடுத்த கட்டமாக பள்ளி, கல்லுாரிகளிலும் தன் சேவைகளை துவக்கும் முயற்சியில் இறங்க இருக்கிறது.பிரபல மின்னணு வர்த்தக இணையதளமான பேடிஎம், கல்வித் துறையிலும் தன் சேவைகளை, அடுத்த நிதியாண்டு இறுதிக்குள் வழங்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. இந்த சேவையின் விற்றுமுதல், முதற்கட்டமாக சுமார், 13 ஆயிரத்து, 400 கோடி ஆக இருக்கும் என கருதுகிறது.இந்திய கல்வித் துறை, சுமார், 6 லட்சத்து, 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட துறையாகும். இந்த மின்னணு வசதியின் மூலம் கல்விக் கட்டணம், தங்குமிடத்துக்கான கட்டணம், தேர்வுக் கட்டணம் என அனைத்தையும் செலுத்த முடியும்.முதற்கட்டமாக சுமார், 25 ஆயிரம் வளாகங்களில் இந்த வசதியை ஏற்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளது பேடிஎம் நிறுவனம். பள்ளி, கல்லுாரிகள் மட்டுமின்றி, பல்கலைக்கழங்கள், ஐ.ஐ.டி., – ஐ.ஐ.எம்., போன்றவற்றுக்கும் இந்த வசதியை செய்து தரவுள்ளது பேடிஎம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|