பதிவு செய்த நாள்
30 மார்2016
10:22
மும்பை : கடந்த இருதினங்களாக பங்குச்சந்தைகள் சரிந்த நிலையில், இன்று(மார்ச் 30ம் தேதி) நல்ல ஏற்றத்துடன் துவங்கின. இதனால் சென்செக்ஸ் மீண்டும் 25 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 217.17 புள்ளிகள் உயர்ந்து 25,117.63-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 68.40 புள்ளிகள் உயர்ந்து 7,665.40 ஆகவும் இருந்தன.
ஏப்ரல் 5ம் தேதி நடைபெற இருக்கும் ரிசர்வ் வங்கியின் கூட்டத்தில், வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பாலும், ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றத்தாலும், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியிருப்பதாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|