பதிவு செய்த நாள்
01 ஏப்2016
07:38
புதுடில்லி : ஜி.இ., நிறுவனம், புதிய திறன்மிக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்த காற்றாலையை அறிமுகம் செய்திருக்கிறது.அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரபல ஜி.இ., நிறுவனம், வழக்கத்தில் இருப்பதற்கு மாறாக, புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம் கொண்ட காற்றாலையை உருவாக்கி உள்ளது. இந்த புதிய காற்றாலை, தற்போது புழக்கத்தில் இருக்கும் காற்றாலைகளை விட, சுமார், 30 சதவீதம் அதிக உற்பத்தியை வழங்க வல்லதாக இருக்கும். புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் ஆன காற்றாலைகளுக்கான டர்பைன்கள், சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். மேலும், இதன் மூலம் உற்பத்தி செலவையும் பெருமளவு குறைக்க முடியும்; உற்பத்தி திறனும் அதிகரிக்கும். நீண்ட காலத்துக்கு நீடித்து உழைக்கும் என்று ஜி.இ., நிறுவனம் தெரிவித்திருக்கிறது.இந்த தொழில்நுட்பம் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் தொழில்நுட்பத்தில் புதுமையை ஏற்படுத்தி, ஒரு மாற்றத்தையே கொண்டுவரும் என்கிறது, ஜி.இ., நிறுவனம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|