பதிவு செய்த நாள்
02 ஏப்2016
07:01
சென்னை : கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், ஒனிடா நிறுவனம், தன் புதிய, ‘இன்வர்ட்டர் ரேஞ்ச்’ எனும், நவீன தொழில்நுட்பத்தில் ஆன, ஸ்மார்ட் வைபை ஏர்கண்டிஷனரை அறிமுகம் செய்திருக்கிறது.
இதுகுறித்து, மிர்க் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் குலு மிர்க்ஹண்டானி கூறியதாவது: சென்ற ஆண்டில் ஸ்பிளிட் ஏர்கண்டிஷனர் பிரிவில், ஸ்மார்ட் வைபை ஏ.சி.,ஐ அறிமுகம் செய்தோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, இந்த ஆண்டு அதே தொழில்நுட்பத்தில் இன்வர்ட்டர் பிரிவில், உயர் தொழில்நுட்ப ஏர்கண்டிஷனரை அறிமுகம் செய்திருக்கிறோம்.இதில் இணையதள தொழில்நுட்பம் உள்ளதால், உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கலாம். மின்சார செலவு எவ்வளவு என்பதையும் இது சுட்டிக்காட்டிவிடும். மேலும் பழுது ஏதேனும் ஏற்பட்டால், தானாகவே கண்டுபிடித்து, அதை வாடிக்கையாளருக்கும் சேவை மையத்துக்கும் தெரிவித்து விடும்இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|