பதிவு செய்த நாள்
02 ஏப்2016
07:02
புதுடில்லி : ஜியோமி நிறுவனம், நடப்பாண்டில் அதிகளவில், புதிய மொபைல் போன்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம், மொபைல் போன்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், இந்தியாவில், 2014ல், பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து, இணையதளம் மூலம், மொபைல் போன் விற்பனையில் களம் இறங்கியது. எதிர்பார்ப்புக்கும் மேலாக இந்த போன்கள் விற்பனை ஆகின. கடந்த ஆண்டு, கடைகள் மூலம் மொபைல் போன்களை விற்பனை செய்ய, ரெடிங்டன் நிறுவனத்துடன் இணைந்தது. நடப்பாண்டில் புதிய வகை போன்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, ஜியோமி இந்தியா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியாவில், ஜியோமி போன்கள், 90 சதவீதம் இணையதளத்திலும், 10 சதவீதம் கடைகளிலும் விற்கப்படுகின்றன. நடப்பாண்டில், பல புதிய போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|