பதிவு செய்த நாள்
02 ஏப்2016
07:03
பனாஜி : இந்தியாவின் குவாலிட்டி கவுன்சில், 26 ஆயிரம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் இசட்.இ.டி., எனப்படும், ‘ஜீரோ டிபெக்ட்; ஜீரோ எபெக்ட்’ மாடலை, அதாவது, ‘பூஜ்ய குறைபாடு; பூஜ்ய விளைவு’ மாடலை அறிமுகம் செய்து வைக்க உள்ளது. இதில், 6,000 நிறுவனங்கள், பாதுகாப்பு துறையினுடையதாக இருக்கும்.இது குறித்து பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த உயரதிகாரி கூறியதாவது:தயாரிப்பில் குறைபாடுகள் இல்லாமலும், சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காமலும் இருக்கும் வகையில், நம் நிறுவனங்கள் இருக்கவேண்டும் என்பது, பிரதமர் மோடியின் விருப்பம். அதன் தொடர்ச்சியே இந்த முயற்சி. போட்டித் தன்மை, உற்பத்தி திறன் கொண்ட நிறுவனங்களாக மாற்றுவதற்கு இசட்.இ.டி., போன்ற நல்ல கருவி உலக அளவிலும் வேறு கிடையாது. பாதுகாப்புத் துறையில், உலக அளவில் பெரும் நிறுவனங்கள் வரும்போது, சிறு நிறுவனங்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அப்போது, இந்த மாடல் கொடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|