பதிவு செய்த நாள்
02 ஏப்2016
07:04
மும்பை : கச்சா வைரம், நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் இறக்குமதி விதிமுறைகளை, ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளஅறிக்கை:கச்சா வைரம், நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்களை இறக்குமதி செய்வதில் உள்ள நடைமுறைகளை எளிமையாக்குவது குறித்து, மத்திய அரசுடன் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, கச்சா வைரம், நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்களை இறக்குமதி செய்வோர், ‘கிளீன் கிரெடிட்’ முறையில் பெறும் கடன் சலுகை வரம்பை, 180 நாட்களுக்கு மேல் நீட்டிக்க, வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், வைர இறக்குமதி நிறுவனத்தின் பூர்வீக செயல்பாடு, நிதியாதாரம், கடன் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஆராய்ந்த பிறகே, வங்கிகள் அனுமதி வழங்கும். இவ்வாறு ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|