பதிவு செய்த நாள்
02 ஏப்2016
07:05
புதுடில்லி : டாடா குளோபல் பிவரேஜஸ் நிறுவனம், உடனடியாக அருந்தும், காபி விற்பனையில், களம் இறங்கி உள்ளது. டாடா குழுமத்தைச் சேர்ந்த, டாடா குளோபல் பிவரேஜஸ் நிறுவனம், டாடா காபி கிராண்ட் என்ற பெயரில், உடனடி காபி விற்பனையில் களம் இறங்கி உள்ளது. டாடா நிறுவனத்திற்கு, தென் மாநிலங்களில் காபி தோட்டங்கள் உள்ளன. இங்கு, அரபிகா மற்றும் ரோபஸ்டா வகை காபி உற்பத்தி செய்யப்படுகிறது. டாடா கிராண்ட் காபி, 50 கிராம் ஜார், 50 கிராம் பாக்கெட், 5.50 கிராம் பாக்கெட் ஆகியவற்றில் விற்கப்படுகின்றன. இவற்றின் விலை முறையே, 110 ரூபாய்; 95 ரூபாய்; 10 ரூபாய் என்றளவில் உள்ளன. இதுகுறித்து, டாடா குளோபல் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்தியாவில் காபி பிரியர்கள் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளது. அவர்களுக்கு, ஏற்ற வகையில், நிறுவனத்தின் காபி தயாரிப்பு இருக்கும்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|