பதிவு செய்த நாள்
03 ஏப்2016
06:55
திருவனந்தபுரம்:பிரபல சில்லரை வர்த்தக நிறுவனமான, பிக் பஜார், வாடிக்கையாளர்களுக்கு, சலுகை ஒன்றை அறிவிக்கப் போய், சிக்கலில் சிக்கிக் கொண்டது.பழைய செய்தித்தாள்கள், உடைந்த வாளிகள், அறுந்த செருப்புகள் உள்ளிட்ட எதை வேண்டுமானாலும் கொடுத்துவிட்டு, தள்ளுபடி பெறலாம் என வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தது, திருவனந்தபுரத்தில் உள்ள பிக் பஜார் நிறுவனம். இப்படி பெறப்பட்ட பழைய பொருட்களை, நகரத்தின் வேறொரு பகுதியில் கொண்டு போய் கொட்ட, தற்போது மாநகராட்சி அமைப்பிடம் சிக்கிக் கொண்டுவிட்டது. பெறப்பட்ட பழைய பொருட்களை மறுசுழற்சி செய்யும் எந்த திட்டமும் இல்லாமல், மலை போல் குவிந்த அவற்றை, நகரின் வேறு ஒரு இடத்தில் இரவோடு இரவாகக் கொண்டுபோய் கொட்டிவிட்டது. இதை அறிந்த மாநகராட்சி நிர்வாகம், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், உடனே குப்பையை அப்புறப்படுத்தவும் ஆணையிட்டது. பிக் பஜார் தரப்பில் குத்தகைதாரர் தங்களுக்கு தெரியாமல் அவ்வாறு செய்துவிட்டதாக கூறியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|