பதிவு செய்த நாள்
03 ஏப்2016
06:57
பிராங்பர்ட்:பிரிட்டனில் உள்ள உருக்கு தொழிற்பிரிவுகளை மூடப்போவதாக, சில நாட்களுக்கு முன் தெரிவித்த டாடா ஸ்டீல் நிறுவனம், தற்போது ஜெர்மன் உருக்காலையை வாங்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த, தைசன்க்ருப் நிறுவனத்தின், ஐரோப்பிய உருக்காலை பிரிவுகள் சிலவற்றையோ அல்லது மொத்தத்தையுமோ வாங்க, டாடா ஸ்டீல் திட்டமிட்டு உள்ளது. ‘இது தொடர்பாக, ஏற்கனவே பேச்சு நடைபெற்று வருகிறது; விரைவில், ஒப்பந்தம் கையெழுத்தாகும்’ என, ஜெர்மன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன. இதையடுத்து, ஜெர்மன், பிராங்பர்ட் பங்குச்சந்தையில், தைசன்க்ருப் நிறுவன பங்கின் விலை, 6 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. சீனாவின் மலிவு விலை உருக்கு இறக்குமதிக்கு, பிரிட்டன் அரசு கட்டுப்பாடு விதிக்க தவறியது; உருக்கு விலை வீழ்ச்சி போன்றவற்றால், டாடா ஸ்டீல் பெரும் இழப்பை சந்தித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|