பதிவு செய்த நாள்
03 ஏப்2016
06:59
‘சென்னை:பிரபல, ‘கிளாஸ்மேட்’ நோட்டு புத்தகத்தின் அட்டைகள், அடுத்த கட்டத்துக்கு செல்ல இருக்கிறது என்கிறார், நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஷைலேந்திர தியாகி.இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:ஐடிசி நிறுவனத்தின் கல்வி மற்றும் எழுது பொருட்கள் வர்த்தகப் பிரிவிலிருந்து, கிளாஸ்மேட் நோட்டுப் புத்தகங்களைத் தயாரித்து விற்பனைக்கு விடுக்கிறோம்.கிளர்ச்சியையும் அறிவையும் வழங்கும் வகையில் எங்களது நோட்டுகளின் அட்டை அமைந்து வருகிறது. அந்த வகையில் அட்டையில் இடம்பெறும் படங்கள் குறித்த செய்திகளை உள்ளே தர இருக்கிறோம். இதற்கு முன் பொதுவான செய்திகள்தான் இடம்பெற்றிருக்கும். இன்னும் ஒரு படி மேலே போய், அட்டையில் இருக்கும் படத்தை, மொபைல் ஆப் மூலம், ஸ்கேன் செய்தால், அது ஒரு விளையாட்டையோ அல்லது புதிரையோ தரும் வகையில் அட்டையை விரைவில் தயாரித்து வழங்க இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|