பதிவு செய்த நாள்
03 ஏப்2016
07:01
கோவை:குறைந்தபட்ச செலவிலான பயணங்களுக்காக, கோவையில், உபர் நிறுவனம், தன் ஆட்டோ சேவையை அறிமுகம் செய்திருக்கிறது.உபர் நிறுவனம், தன் வாடகை கார் சேவையை அடுத்து, குறைந்தபட்ச செலவில், அருகில் இருக்கும் இடங்களுக்கு கோவை மக்கள் சென்று வருவதற்கு வசதியாக, உபர் ஆட்டோ வசதியை ஏற்படுத்தி உள்ளது. கூடவே அதற்கான, ‘ஆப்’ வசதியையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.இது குறித்து இந்நிறுவன பொது மேலாளர் முகேஷ் முரளிதரன் கூறியதாவது:கோவை போன்ற மிகச் சிறிய பரப்பளவு கொண்ட நகரங்களுக்கு, இந்த சேவை மிகவும் தேவையான ஒன்று. குறிப்பாக, மளிகைக் கடை போன்ற இடங்களுக்கு செல்ல வசதியாக இருக்கும். கட்டணத்தை ரொக்கமாகவோ அல்ல கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலமாகவோ செலுத்தலாம். ஆட்டோ ஓட்டுனர்களும் நவீன தொழில்நுட்பத்துக்கு தங்களை ஏற்றவர்களாக மாற்றிக்கொள்ளவும் இந்த சேவை உதவும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|