பதிவு செய்த நாள்
04 ஏப்2016
06:23
புதுடில்லி : ஐரோப்பிய கூட்டமைப்பு வங்கி, லக்னோ மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கு, 51 கோடி டாலர் கடன் வழங்க உள்ளது. இந்திய – ஐரோப்பிய கூட்டமைப்பு மாநாடு, பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸல்ஸ் நகரில் நடந்தது. இதில், பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த மாநாட்டில், உ.பி., மாநிலம், லக்னோ நகரில், 23 கி.மீ., நீளத்திற்கு அமைக்க உள்ள, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, ஐரோப்பிய கூட்டமைப்பு வங்கி, 51.20 கோடி அமெரிக்க டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளித்தது. இந்த நிதி, மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளுக்கும், ரயில்கள் வாங்கவும் பயன்படுத்தப்படும். இதனால், லக்னோ பொது போக்குவரத்து பயன்பாடும் அதிகரிக்கும்.ஐரோப்பிய வங்கி, இந்தியாவில், பல்வேறு திட்டப் பணிகளுக்காக, கடந்த, 20 ஆண்டுகளாக கடன் உதவி செய்கிறது. ஆனால், லக்னோ மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வழங்கிய கடன் அளவே பெரிய அளவாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|