பதிவு செய்த நாள்
04 ஏப்2016
06:24
பனாஜி : கோவா பாதுகாப்பு கண்காட்சியில், ஓட்டுனர் இல்லாத பேருந்து அறிமுகம் செய்யப்பட்டது. கோவா மாநில, பாதுகாப்பு துறை கண்காட்சியில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த, பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்தன. இந்த கண்காட்சியில், குர்கானைச் சேர்ந்த, ’ஹைடெக் ரோபோடிக்ஸ் சிஸ்டம்ஸ்’ என்ற நிறுவனம், ஓட்டுனர் இல்லாத பேருந்தை அறிமுகம் செய்தது. இதுகுறித்து, அந்நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்த பேருந்துக்கான ஆராய்ச்சி முதல் தொழில்நுட்பம் வரை, அனைத்துமே உள்நாட்டில் உருவாக்கப்பட்டதுதான். அதுமட்டுமல்ல; நம்நாட்டில், முதன்முறையாக, இத்தகைய ஓட்டுனர் இல்லாத பேருந்து அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான வரவேற்பை பொறுத்து, நம் நாட்டில், ஓட்டுனர் இல்லாத பேருந்துகள் அதிகம் அறிமுகமாகும் என, நம்புகிறோம்” என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|