பதிவு செய்த நாள்
06 ஏப்2016
10:25
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக காணப்படுகின்றன. ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி வகிதத்தை குறைத்ததன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்கள் அதிகளவில் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்ததால் நேற்றைய வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 500 புள்ளிகளும், நிப்டி 135 புள்ளிகளும் சரிந்தன.
இந்நிலையில் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பமாகின. வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 117.06 புள்ளிகள் உயர்ந்து 25,000-ஆகவும், நிப்டி 35.45 புள்ளிகள் உயர்ந்து 7,638-ஆகவும் இருந்தன.
ஆனால் இந்த ஏற்றம் சற்றுநேரம் நீடித்தது. பங்குச்சந்தைகள் மீண்டும் சரிய தொடங்கின. காலை 10.15 மணியளவில் சென்செக்ஸ் 6.48 புள்ளிகள் சரிந்து 24,877.11-ஆகவும், நிப்டி 1.65 புள்ளிகள் உயர்ந்து 7,604.85-ஆகவும் இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|